இந்தியாவின் முன்னணி telegram சேவை நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் அதிரடியாக அதன் ரூ.99 குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தை கைவிட்டு இனி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரீசார்ஜ் தொகையாக ரூ.155 செலுத்த வேண்டும் என்று முன்னதாக  கேட்டுக் கொண்டது. இதன் முதல் கட்டமாக இந்தியாவின் இரண்டு பகுதிகளுக்கு மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது‌. இந்த திட்டம் விரைவில் அனைத்து இடங்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கபட்டிருந்த நிலையில் ஏர்டெல் தனது குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் விலையை ரூ.99ல் இருந்து ரூ.155 ஆக உயர்த்தியுள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பீகார், உ.பி., ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டம் சிலருக்கு 24 நாட்கள் மட்டுமே காட்டப்படுவதால் வாடிக்கையாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.