கரடி விரட்டினால் மரத்தில் ஏறி தப்பித்துக் கொள்ளலாம் என்று சிறுவயதில் அனைவரும் கதை கேட்டிருப்போம். ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது கரடி ஒன்று தனது குட்டியுடன் மரத்தின் உச்சிக்கு ஏறும் வீடியோவை வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் X தளத்தில் பகிர்ந்துள்ளார். கரடி விரட்டும் போது மரத்தில் ஏறினால் எந்த பயனும் இல்லை என்றும் சிறுவயதில் கேட்ட கதை பொய்யாகியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.