கர்நாடக மாநிலத்தில் உள்ள காரி மணி கிராமத்தில் சோமப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயப்பா மற்றும் யல்லப்பா என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மல்லப்பா பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்தப் பெண்ணின் தந்தை பகீரப்பா பாம்விகாலா (50). இந்நிலையில் மாயப்பா இளம்பெண் எங்கு  சென்றாலும் அவருக்கு தொந்தரவு கொடுத்ததோடு தன்னை காதலிக்கும் படியும் வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக அந்த பெண் தன் தந்தையிடம் கூறிய நிலையில் அவர் மாயப்பாவிடம் சென்று தன் மகளுக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு அவர் முடியாது என்று கூறிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பகீரப்பா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மல்லப்பாவை சரமாரியாக குத்தினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த யல்லப்பா அதை தடுக்க வந்தபோது அவரையும் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அங்கிருந்து பகீரப்பா தப்பி ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து சகோதரர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைமாக இருக்கும் பகீரப்பாவை வலை வீசி தேடி வருகிறார்கள்.