பஞ்சுமிட்டாய்களில் அபாயகரமான ரசாயனங்கள் சேர்க்கப்படுவதை கண்டறிந்த இமாச்சலப் பிரதேச மாநில அரசு பஞ்சுமிட்டாய்க்கு ஓராண்டு தடைவிதித்து சமீபத்தில் உத்தரவிட்டது. அபாயகரமான நிறமூட்டும் பொருளான ரோடமைன் பி இருப்பதால் பஞ்சுமிட்டாய் உற்பத்தி, விற்பனை மற்றும் சேமிப்பிற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது சர்க்கரையை சூடாக்கி, திரவம் ஆக்கி அதன் பிறகு அதை இயந்திரம் வழியாக சுழற்றுவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளும் பஞ்சுமிட்டாய்க்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது