பொதுவாக மக்கள் செல்வம் என்றால் பெரிய வீடு, கார், பணம், அதிகாரம் என்று தான் நினைப்பார்கள். ஆனால் உண்மையான செல்வம் என்றால் குடும்ப பாசம் என்பதை நிரூபிக்கும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஓடும் ரயிலில் தனது மகளின் தலைமுடியை அன்புடன் பின்னிக்கொடுத்த தந்தையின் காட்சி இணையத்தில் மக்களின் இதயங்களை கொள்ளை கொண்டுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்தவர்கள், “இதுதான் உலகின் மிகப்பெரிய செல்வம்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த காட்சியில், ஒரு தந்தை, தாய், சிறுமி மூவரும் ரயில் பெட்டியில் சாதாரணமாகப் பயணம் செய்கிறார்கள். தந்தை தலையில் ஒரு துண்டு கட்டிக்கொண்டு, மகளின் தலைமுடியை கவனமாக ஜடை போடுகிறார். மகள் தந்தையின் மடியில் நிம்மதியாக அமர்ந்திருக்கிறாள். அருகில் தாய் சும்மா சாய்ந்து மகிழ்ச்சியாக இருக்கிறார். முகங்களில் பாசாங்கோ, போலியான புன்னகையோ எதுவும் இல்லை, குடும்ப அன்பும் நெருக்கமும் மட்டுமே தெரிகிறது. மகளின் புன்னகையும் தந்தையின் அன்பும் அந்த தருணத்தை விலைமதிப்பற்ற செல்வமாக்குகிறது.
View this post on Instagram
“>
இந்த வீடியோவை speedy__world என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. அதை பார்த்த நெட்டிசன்கள், “உலகின் பெரிய பணக்காரர் தான் குடும்பத்தை ஒன்றாக வைத்திருப்பவர்” என்று பாராட்டினர். சிலர், “வாழ்க்கையில் உண்மையான செல்வம் பணமல்ல, குடும்பத்துடன் கழிக்கும் தருணங்கள்தான்” என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் இந்த சாதாரண குடும்ப காட்சி, இணையத்தில் அசாதாரண மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
