சென்னையில் தனக்கு கிடைத்த பரிசு தொகையில் சிறுவன் ஒருவன் தன் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணுக்கு செல்போன் வாங்கி கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது. நீண்ட நாட்களாக வீட்டில் வேலை செய்து வரும் அந்த பெண் செல்போன் இல்லாமல் இருந்ததை கவனித்து அந்த சிறுவன் தனக்கு பேட்மின்டன் போட்டி மூலம் கிடைத்த பரிசு தொகையை கொண்டு அந்தப் பெண்ணுக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். சிறுவயதிலேயே அன்பால் உயர்ந்த இந்த சிறுவனின் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.