நாடு முழுவதும் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் சர்க்கரைக்கு பதில் 490 ரூபாய் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கு பதில் பயனாளிகள் அனைவருக்கும் வங்கி கணக்கில் 490 ரூபாய் செலுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். 3.37 லட்சம் பயனாளிகளுக்கு தலா 490 ரூபாய் வழங்க 16.53 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.