தெலுங்கானா மாநில பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஹோலி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கானா அரசு விடுமுறை அளித்துள்ளது. வருகின்ற மார்ச் 25ஆம் தேதி திங்கட்கிழமை தெலுங்கானா மாநிலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் மார்ச் 29 புனித வெள்ளி அன்றும் பொது விடுமுறை நாளாகவும், மார்ச் 31 விருப்ப விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் இறுதி தேர்வுக்கு மிகவும் தீவிரமாக தயாராகி வருவதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.