இந்தியாவில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் சரியான மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அதிக அளவிலான குளிர் உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 2.8 டிகிரி செல்சியஸ் நிலவி வரும் நிலையில் கடுமையான குளிர் காரணமாக மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வழக்கத்திற்கு மாறாக மாநிலத்தில் அதிக அளவிலான குளிர் ஏற்படுவதால் ஹரியானா அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி கடும் குளிர் மற்றும் காலநிலை காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் ஜனவரி 1 முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை தொடர்ந்து 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.