மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆன சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை வருகின்ற மார்ச் மாதத்திற்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்சி சார்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில் சிபிஎஸ்சி பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 2024ஆம் ஆண்டு குறித்த நேரத்தில் பொது தேர்வை நடத்தி முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இதற்கு பள்ளிகள் ஒத்துழைக்க வேண்டும். மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை , பாடப்பிரிவு மாற்றம், பள்ளி மாற்றம் உள்ளிட்ட பணிகள் அனைத்தையும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.