தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அனைத்து மதுபானக்கூடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் மதுபானங்கள் பதுக்கலை தடுக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. அதனை ஏற்று, சிசிடிவி கேமராவை பொருத்தவும், அதுதொடர்பான புகைப்படங்களை அனுப்பவும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.