அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உறுதியளித்துள்ளார். திமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையை சில குடும்ப தலைவிகளே பெறுவதாகவும் பலருக்கும் கிடைக்காமல் உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சி அமைத்ததும் தற்போது உரிமை தொகை பெறுபவர்கள் உட்பட அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் வழங்குவோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.