தமிழகத்தில் தற்போது தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி அரசியல் கட்சியினர் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ஒருவரையொருவர் விமர்சனம் செய்தும் பேசி வருகின்றனர். இந்நிலையி தூத்துக்குடி மாவட்டம் புதியம்புதூரில் திமுகவின் மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மீன்வளத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

அப்போது பேசிய அவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டு டெபாசிட் வாங்கட்டும், அரசியலை விட்டே விலகி விடுகிறேன் என சவால் விட்டுள்ளார். மேலும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.