நோயாளிகளோ அல்லது அவர்களது உறவினர்களோ மறுப்பு தெரிவித்தால் ஐசியூவில் அனுமதிக்க நிர்பந்திக்க கூடாது என்று மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. எந்தெந்த நோயாளிகளை ஐசியூவில் வைத்து மருத்துவம் அளிக்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. அந்த வழிகாட்டுதல்களுக்கு மருத்துவர்கள் மத்தியில் வரவேற்பும் எதிர்ப்போம் ஒரு சேர கிளம்பியுள்ள நிலையில் மத்திய அரசு தற்போது இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.