பிரபு நடிகை சன்னி லியோன் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடித்துள்ள படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சன்னி லியோன் சென்றிருந்த போது தான் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்து பேசி உள்ளார். அதாவது நடிகை சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்துவிட்டு தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களில் நடிக்க  வந்த போது அவருக்கு ஏராளமான கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. சன்னி லியோன் தன்னுடைய கணவரான டேனியலிடம் தான் இந்தியாவிற்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.

ஏனெனில் இந்தியாவிற்கு வந்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் வரும் என்று பயந்து சன்னி லியோன் அப்படி கூறியுள்ளார். ஆனால் டேனியல் சன்னி லியோனை தைரியமாக இந்தியாவிற்கு அழைத்து வந்ததோடு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அவரை கலந்து கொள்ள வைத்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் சன்னி லியோன் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டுள்ளனர். அந்த சமயத்தில் சன்னி லியோன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த சமயத்தில் சன்னி லியோன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அப்போது அவருக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதோடு கொலை மிரட்டல்களும் வந்துள்ளது. மேலும் அந்த சமயத்தில் பெண்கள் நிறைய பேர் என்னிடம் பேசினார்கள் என்று கூறியுள்ளார்.