தமிழ் சினிமாவில் தன்னுடைய பாடல் வரிகளால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போட்டவர் தான் கவிஞர் வைரமுத்து. இவர் தொடர்பாக பாடகி சின்மயி பல எதிர் முரணான பதிவுகளை அவ்வபோது வெளியிட்டு வரும் நிலையில் தற்போது அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நான் வைரமுத்துவிடும் பாடச் சென்றேன், ஆனால் அவர் என்னை தனியாக இருக்கும் ஒரு முகவரிக்கு வர சொன்னார். அவர் ஒரு நல்ல மனிதர் கிடையாது இதனைப் போலவே பல பெண்களுக்கும் நடந்துள்ளது.

இதுபோன்று நடந்து கொள்ளும் வைரமுத்துவிற்கு எதிராக அரசியல்வாதிகள் முன்வந்து பேச வேண்டும். சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் வைரமுத்துவின் மீது புகார் கொடுத்தேன். இதுவரை யாரும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. வைரமுத்து எப்போதும் முகத்தை பார்த்து பேச மாட்டார் என்று கூறி வைரமுத்து தொடர்பாக சின்மயி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரல் ஆகிய வருகிறது.