ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியை முன்னிட்டு அக்டோபர் 20 ஆம் தேதி மற்றும் 21 ஆம் தேதி ஆகிய இரு நாட்கள் பயணிகளுக்கு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீடிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நெரிசல் மிகுநேரங்களாக கருதும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை, 9 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட்ட நிலையில், மேலே உள்ள இரு நாட்களுக்கு மட்டும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.