மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற வரும் கலவரத்தில் மெய்தி இனத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பழங்குடியின பெண்ணை நிர்வாணமாக்கி அவரின் அந்தரங்க பாகங்களை வலுக்கட்டாயமாக தொட்டு இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்ற வீடியோவை பார்க்கும் மன தைரியம் எனக்கு இல்லை. மூன்று மாதங்களுக்கு பிறகு இப்போது தான் இது குறித்து பிரதமர் மோடி வாய் திறந்து பேசியுள்ளார். மணிப்பூர் கலவரத்திற்கு பிரதமர் மோடியும் அந்த மாநில அரசும் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.