அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் மொழி தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது  “தமிழர்களுக்கு தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல. அது அவர்களின் வரலாறு, கலாச்சாரம், வாழ்க்கை முறையாகும்.

தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை ஒருபோதும் நான் அனுமதிக்கவே மாட்டேன். தமிழ் மொழியை அச்சுறுத்துவது இந்திய நாட்டின் அடிப்படை கட்டமைப்பையே அச்சுறுத்தும் ஒரு செயலாகும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.