தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த நிலையில் இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றனர். இவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் காவலா பாட்டுக்கு நடனமாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

இந்த நிலையில் நடிகை தமன்னா தனது படத்தேர்வு குறித்து சுவாரசியமான கருத்துக்களை பகிர்ந்து உள்ளார். தென்னிந்திய சினிமாவில் மிகைப்படுத்தப்படும் ஹீரோஸியம் படங்கள் ஏராளம். குறிப்பாக கமர்சியல் படங்களில் ஹீரோயிசத்துக்கே முக்கியத்துவம் தருகிறார்கள். நடிகைகள் காட்சிகளை குறைத்து விடுகின்றனர். எனவே அது போன்ற படங்களில் நான் நடிப்பதை நிறுத்தி விட்டேன் என்று தமன்னா தெரிவித்துள்ளார்.