தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற இருந்த லியோ பட இசை வெளியீட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் பல்வேறு வகைகளில் ட்ரோல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டரில் ஆடியோ லான்ச் இல்லை என்றால் என்ன, ஆட்சிய புடிச்சுட்டா போச்சு, என்ன நண்பா ?என்ற வசனம் இடம் பெற்றுள்ள நிலையில் அந்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.