கன்னட பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை சுதீப் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் வர்தூர் சந்தோஷ். கர்நாடகாவை சேர்ந்த விவசாயியான இவர் சமூக ஆர்வலரும் கூட இவர் பிக் பாஸில் கலந்து கொண்ட போது இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியானது. அந்த புகைப்படத்தில் அவர் அணிந்திருந்த செயின் டாலர் புலி நகத்தைப் போன்று இருந்துள்ளது.

இதனால் வனத்துறையினருக்கு சந்தேகம் எழுந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு சந்தோஷின் செயின் டாலரை பரிசோதனைக்காக கேட்டுள்ளனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அது புலி நகம் தான் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் உடனடியாக போட்டியாளர் சந்தோஷை தங்களிடம் ஒப்படைக்குமாறு வனத்துறை அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதனை அடுத்து வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சந்தோஷ் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.