பாலஸ்தீன் காசா நகரில் சுமார் 20 ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ராணுவ தாக்குதலில் உயிரிழந்ததில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள், வயதானோர் ஆகும். இந்நிலையில், காசா நகரில் இருக்கும் ஒரு இஸ்ரேல் ராணுவ வீரர், பெண்ணின் உள்ளாடையை எடுத்து, அதனை அருகில் தூங்கி கொண்டு இருக்கும் இன்னொரு இஸ்ரேல் ராணுவ வீரர் முகத்திற்கு நேரே காண்பித்து விளையாடும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படங்களின் உறுதித்தன்மையை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.