உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, ‘GOAT இந்தியா டூர்’ நிகழ்வுக்காக கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ஸ்டேடியத்திற்கு வந்தார். மெஸ்ஸியைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் ₹12,000 முதல் பல லட்சம் வரை கொடுத்து டிக்கெட் வாங்கியிருந்தனர். ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அவர் சிலையைப் பார்வையிடாமல் ஹோட்டலில் இருந்து விர்ச்சுவலாகத் திறந்து வைத்தார். மேலும், ஸ்டேடியத்திற்கு வந்த மெஸ்ஸி, மிகக் குறுகிய நேரம் மட்டுமே இருந்துவிட்டு அவசரமாகப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
#WATCH | Kolkata, West Bengal: Angry fans resort to vandalism at the Salt Lake Stadium in Kolkata, alleging poor management of the event.
Star footballer Lionel Messi has left the Salt Lake Stadium in Kolkata.
A fan of star footballer Lionel Messi said, "Absolutely terrible… pic.twitter.com/TOf2KYeFt9
— ANI (@ANI) December 13, 2025
இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். அதிகப் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியும் மெஸ்ஸியைச் சரியாகப் பார்க்க முடியவில்லை என்ற கோபத்தில், அவர்கள் மைதானத்தில் இருந்த பாட்டில்கள் மற்றும் நாற்காலிகளை வீசி எறிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். நிலைமை மோசமடையவே, கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக போலீஸார் தடியடி நடத்தினர். மெஸ்ஸியை வரவேற்கக் காத்திருந்த அந்தச் சூழல், இறுதியில் ரசிகர்களின் ஏமாற்றம் மற்றும் போலீஸ் நடவடிக்கை என முடிந்தது.
