உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வாட்ஸ் அப்பின் விதிமுறைகளை மீறினால். உடனே அந்த கணக்குகள் முடக்கப்படும் என வாட்ஸ் அப் தெரிவித்திருந்தது. அதன்படி, கடந்த டிசம்பரில்(2022) இந்தியாவில் வாட்ஸ் அப் விதிமுறைகளை மீறியதாக 36 லட்சம் பேரின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதில், 13,89,000 வாட்ஸ் கணக்குகள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் அறிவித்துள்ளது.