அதிமுக முன்னாள் அமைச்சர் துரை ராமசாமி வயது மூப்பு காரணமாக காலமானார். ஆரம்பக்கட்டத்தில் காங்கிரஸில் இருந்த இவர் 1980 தேர்தலில் சீட் கிடைக்காததால் அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து வெள்ளக்கோயில் தொகுதியில் 5 முறை எம்.எல்.ஏ-வாகவும், ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். மேலும்,தர்மயுத்தத்தின்போது ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாகவும் அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.