தமிழ் மகன் உசேனை அங்கீகரித்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

தேர்தல் தொடர்பான படிவத்தில் அவை தலைவர் கையெழுத்திட தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான சின்னத்திற்கான படிவத்தில் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட அதிகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம். குறுகிய காலத்திற்கு அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அங்கீகாரம் அளிப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதாவது, தமிழ் மகன் உசேனை அங்கீகரித்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலர் சிவகுமாருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. அதிமுக வேட்பாளருக்கான ஏ. பி படிவங்களில் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.தமிழ் மகன் உசேனுக்கு அங்கீகாரம் தந்ததால் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதி ஆகிவிட்டது.