மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிமுக தவிர்த்து வேறு ஒரு பெரிய கட்சியுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்களுக்கு 1 தொகுதி உறுதியாக கேட்டு வருகிறோம்.

நாடாளுமன்றத்தில் எளிய மக்களின் குரலாக மக்களின் உரிமையை பெற்றுத் தருவோம். இந்திய ஜனநாயகப் புலிகள் யாருடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்போம் என அறிக்கை வாயிலாக மன்சூர் அலிகான் விளக்கமளித்துள்ளார்.