உத்தரகாண்ட் மாநிலத்தின் பிதோராகர்ஃபில் உள்ள கிராம் தேவத் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 1.52 மணியளவில் திடீரென ஒரு பெரிய பாறை வீடு ஒன்றின் மீது விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் 12 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். மேலும் நால்வர் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர். உடனடியாக தீயணைப்பு படை, போலீஸ் மற்றும் SDRF குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். சிறுவனின் உடல் பாறைகளையும் இடிபாடுகளையும் அகற்றியபின் மீட்கப்பட்டது என உத்தரகாண்ட் போலீசார் தெரிவித்துள்ளனர்.
19.08.2025 को 1.52 बजे ग्राम देवत पिथौरागढ में मकान में पत्थर गिर गया। तत्काल FIRE, पुलिस, SDRF टीम ने घटनास्थल पर पहुंचकर रेस्क्यू कार्य किया।12 वर्षीय बालक की मृत्यु हो गई थी। जिसको रेस्क्यू टीमों द्वारा संयुक्त रुप से सामान व पत्थर हटाकर निकाला गया 4 लोग सामान्य घायल हैं । pic.twitter.com/zm8hvqYeVG
— Uttarakhand Police (@uttarakhandcops) August 19, 2025
“>
இதே நேரத்தில், தொடர்ந்த கனமழையால் கங்கை ஆற்றின் நீர்மட்டம் ஆபத்தான அளவுக்கு உயர்ந்ததால், அங்குள்ள கடற்கரைகளை பொதுமக்கள் அணுக முடியாத வகையில் முழுமையாக முடக்கி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
போலீசார் பகுதியை முற்றுகையிட்டு தடுப்பணைகள் அமைத்துள்ளனர். பொதுமக்கள் ஆற்றங்கரை அருகே செல்ல வேண்டாம் என்றும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
