இந்தியாவில் மாநில வாரியாக எந்தெந்த மாநிலங்களில் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளார்கள் என்ற விவரத்தை நிதி ஆயோக் தலைமையிலான தேசிய பல பரிமாண வறுமைக் குறியீடு (MPI) ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவிலேயே குஜராத்தான் அதிக அளவில் உள்ளது, அம்மாநிலத்தில் 38.09% மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதில் கிராமப்புறத்தில் 44.45 சதவீதமும், நகர்புறத்தில் 28.97% பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 2.2 சதவீத மக்களும், கேரளாவில் 0.55 சதவீத மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக் அறிக்கையின்படி, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலங்கள் குஜராத்தை விட ஊட்டச்சத்து முன்னணியில் ஒப்பீட்டளவில் சிறப்பாக உள்ளது.  தேசிய குடும்ப சுகாதார ஆய்வு தரவுகளின்படி, வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் அடிப்படையில் குஜராத் நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.