தேனியில் இருந்து ராமநாதபுரத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வந்திறங்கிய ஹெலிகாப்டரில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அண்ணாமலை ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியவுடன் சோதனை செய்த அதிகாரிகள், விதிமீறல் எதுவும் இல்லையென்பதால் புறப்பட்டு சென்றனர். இதனையடுத்து, அரண்மனை பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பிரசாரம் செய்ய அண்ணாமலை புறப்பட்டுச் சென்றார்.