சேலம் மாவட்டத்தில் திமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது மேடையில் உதயநிதி ஸ்டாலினுக்கு கை கொடுப்பதற்காக ஒரு தொண்டர் வந்தார். அப்போது அமைச்சர் கே.என் நேரு கோபத்துடன் அந்த தொண்டரின் சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் அமைச்சர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் ஒருவர் இப்படியா சாதாரண தொண்டரிடம் நடந்து கொள்வது என கண்டனங்கள் வலுத்து வந்தது.

இந்நிலையில் அமைச்சர் கே.என் நேரு தாக்கியதாக சொல்லப்பட்ட தொண்டர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அண்ணன் கே.என் நேரு வாரி வழங்கும் வள்ளல். அவர் எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். அவர் என்னை மேடையில் அடிக்கவில்லை என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.