மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள சிவபெருமானின் உருவமான கால பைரவநாதர் கோயிலில் பிரசாதமாக மதுபானம் வழங்கப்படுகிறது. இங்கு கடவுளுக்கு பிரசாதம் உட்பட அனைத்து பொருட்களும் சாராயத்தில் தயார் செய்யப்படுகிறது. இது விஸ்கி அல்லது வேறு விதமான மது வகையாக வழங்கப்படுகிறது. காலபைரவரின் வாயில் சாராயம் ஊற்றப்படுகிறது.

மேலும் இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. பொதுவாக கோவில்களைச் சுற்றியுள்ள கடைகளில் பூக்கள், இனிப்புகள் விற்கப்படுவதைப் பார்த்துள்ளோம். இங்கு, எந்த கடைக்கு சென்றாலும், மது விற்பனை தான் நடக்கிறது.