பாலியல் குற்றவாளிகளுக்கு அரசு வேலை இல்லை எனவும் பெண்களின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை தரப்படும் என சத்தீஷ்கர் முதல்வர் தெரிவித்துள்ளார். சத்தீஷ்கர் மாநிலத்தில் இந்த வருட இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதன்படி, பெண்களின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை தரப்படும். சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், பலாத்கார குற்றங்கள் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றச்செயல் புரிந்தவர்கள் அரசு வேலைகளில் தடைசெய்யப்படுவார்கள் என நேற்று அறிவித்துள்ளார்.