இந்தியாவில் 2011ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் ஐசிசி உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ளது. 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி தொடங்குகிறது.

இந்த உலகக்கோப்பை உலகம் முழுவதும் முக்கிய நகரங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் 50 நாட்கள் உள்ள நிலையில், தற்போது தாஜ்மஹாலில் டிராஃபி பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.