உலகின் மூலை முடுக்கலாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. அந்தவகையில் நபர் ஒருவர் ஆழ்கடலில் சுத்தியை எடுத்து சங்கை உடைக்கிரார். அந்த சங்கை உடைப்பதற்குள் பசியால் அந்த மீன் அவரிடம் பதறுகிறது.

உடனே இரு இரு உடைத்து தருகிறேன் என்பது போல அந்த நபர் சைகை செய்து அந்த மீனை அங்கிருந்து நகர்த்தி, அதன் பிறகு சங்கை உடைத்து அதிலிருந்து சதையை எடுத்து அந்த மீனிற்கு கொடுக்கிறார். அந்த உணவை சாப்பிட்ட மீன் அந்த நபரிடம் இருந்து நகர்ந்து செல்கிறது. இந்த வீடியோவானது இணையத்தில் பரவ இதை பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்தோடு கமெண்ட் செய்து வருகிறார்கள்.