அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் ராமரின் பக்தர்கள், கோவிலுக்கு பல வித்தியாசமான பரிசுகளை காணிக்கையாக வழங்கிவருகின்றனர். 1265 கிலோ லட்டு, உலகின் நீண்ட ஊதுபத்தி என பலதரப்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உத்திரபிரதேச மாநில அலிகர்(Aligarh) என்ற இடத்தில் தயாரிக்கப்பட்டுள்ள உலகின் மிக பெரிய பூட்டு அயோத்திக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சத்யா பிரகாஷ் சர்மா மற்றும் ருக்மணி சர்மா என்ற தம்பதிகள் இந்த பூட்டினை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னரே தயாரிக்க தொடங்கிவிட்டதாகவும், முடிக்கும் முன்னர் சத்யா பிரகாஷ் உயிரிழந்துவிட்டதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.