சிலிண்டர் டெலிவரி ஊழியர் ஆன்லைன் கிரிக்கெட் விளையாட்டில் ஜாக்பாட் பரிசு பெற்றுள்ளார். இவர், ட்ரீம்-11 செயலியில் கிரிக்கெட் விளையாடிய, பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள படேகானா பகுதியைச் சேர்ந்த சாதிக் ரூ.1.5 கோடி பரிசுத் தொகையை வென்றுள்ளார். ஏஜென்சி ஒன்றில் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்யும் இவர், இம்மாதம் 14ஆம் தேதி நடைபெற்ற இந்தியா-ஆப்கானிஸ்தான் டி20 போட்டியின் போது ட்ரீம்-11ல் விளையாடினார்.

இந்தப் போட்டியில் 974.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தார். இதற்கிடையில், சாதிக்கின் ஏஜென்சி இயக்குநர் ஜிதேந்திரா கூறுகையில், பரிசுத் தொகை வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளது என்றார்.