சென்னை தி.நகரில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய மு.க.ஸ்டாலின், அடுத்த தேர்தலில் நாம் கை காட்டுபவர்தான் பிரதமராக வேண்டும். அதற்கு திமுக கூட்டணி 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி, விடியல் பயணம் வரை மகளிருக்கு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

செல்லும் இடங்களில் மகளிரின் உண்மையான அன்பைக் காண்கிறேன் என்றார். இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் அமைப்பது, திட்டங்கள் நிறைவேற்றுதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.