பிரபாகரன் நிச்சயம் ஒரு நாள் வருவார், அவர் இருக்கின்றார் என்ற எண்ணத்தோடு தான் இருப்பதாக வைகோ கூறியுள்ளார். வைகோ, சென்னை மதிமுக அலுவலகத்தில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் 69வது பிறந்தநாளை கட்சியினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது பேசிய அவர், ‘என்றாவது ஒருநாள் பிரபாகரன் வருவார், அவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கையில் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகிறோம். பிரபாகரனுடன் இருந்த பழ.நெடுமாறன், காசி ஆனந்தன் போன்றவர்கள் பொய் சொல்லமாட்டார்கள்’ இவ்வாற்ய் கூறினார்.