வரும் கல்வியாண்டு (2024-2025) முதல் சிபிஎஸ்இ பாடத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மற்றும் மார்ச்சில் பொதுத்தேர்வுகள் நடைபெறும். இரண்டில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதுவே இறுதி மதிப்பெண்ணாக கருதப்படும். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என தெரிகிறது.