பொதுவாக ஒரு ஊழியர் வேலை பார்க்கும் போது அவர்களுக்கான சம்பளம் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த சம்பள கணக்கு சாதாரண சேமிப்பு கணக்கு போல இருந்தாலும் அதில் பல வகையான வசதிகள் ஊழியர்களுக்கு வழங்கப்படும். அதாவது மற்ற சேமிப்பு கணக்குகளில் கட்டாயம் குறைந்தபட்ச பேலன்ஸ் மெயின்டன் செய்ய வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் சம்பள கணக்கில் ஜீரோ பேலன்ஸ் வைத்திருந்தாலும் வங்கி சார்பில் எந்த ஒரு அபராதமும் விதிக்கப்படாது.

இருந்தாலும் தொடர்ந்து மூன்று மாதங்கள் உங்களுடைய சம்பள கணக்கில் சம்பளம் வரவில்லை என்றால் உங்களுடைய சம்பள கணக்கு சாதாரண சேமிப்பு கணக்காக அப்படியே மாறிவிடும். இவ்வாறு உங்களுடைய சம்பள கணக்கு சேமிப்பு கணக்காக மாறும் போது நீங்கள் கட்டாயம் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிப்பது அவசியமாகும்.