உலகின் பல நாடுகளிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் மக்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்நிலையில் அந்தமார் நிக்கோபார் தீவுகளில் நேற்று நான்கு முறை தொடர் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஒரு மணிக்கு திக்லி பூரில் 3.9 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கம்பெேல் பே என்ற இடத்தில் அதிகாலை 2.30 மணிக்கு 4.6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர் நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.