வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 21 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் பைக் மீது பேருந்து மோதி விபத்தில் சிக்கியது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர் திசையில் வந்த லாரி மீது மோதியது. இதில் 21 பேர் பலியான நிலையில் 38 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேரின் நிலை கவலைக்குரிய வகையில் உள்ளது.