தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தக்காளி விலையானது கிலோ 130 ரூபாய்க்கும், சாம்பார் வெங்காயம் விலை கிலோ 150 ரூபாய்க்கும் விற்பனையாகி வந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக சென்னை மாநகரில் கூட்டுறவுத் துறை மூலம் நியாயவிலை கடைகளில்  கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதற்கிடையில் பீன்ஸ், பச்சை மிளகாய் போன்ற விலையும் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் விழுப்புரத்தில் தக்காளிக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது இஞ்சி. விழுப்புரம் காய்கறி சந்தையில் ஒரு கிலோ இஞ்சி 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.