மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொடூர சம்பவம் நடந்துள்ளது. சத்ரிபுரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட நைனா சவுதே அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் அவரது கணவர் மிலிந்த் சவுதே கழுத்தை நெரித்தது தெரியவந்தது. மிலிந்த் தனது மனைவி அடிக்கடி போனில் பேசுவதாக கூறியுள்ளார்.

மேலும் அவருக்கு திருமணத்திற்கு புறம்பான தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இந்த  கோபத்தில், தொண்டையில் டவலை கட்டி கொன்றதை ஒப்புக்கொண்டார். குற்றவாளியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.