அடர்நிற மிட்டாய்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்க வேண்டாம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், குழந்தைகளின் உடல்நலத்தை பாதிக்கும் ரசாயனம் கலந்த பஞ்சுமிட்டாயை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்க வேண்டாம்.

ரசாயனம் கலந்த பஞ்சுமிட்டாய்களை உற்பத்தி செய்து விற்பவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பெற்றோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதே நமது எண்ணம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.