உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயணங்களில் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து புதுவித அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது பயனர்களுக்கு புதிய கருவி ஒன்றை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வாட்ஸ் அப் செயலியில் புதிதாக newsletter என்ற கருவி கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பயனர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை பார்க்க உதவியாக இருக்கும். அதில் விளையாட்டுச் செய்திகள்,சினிமா செய்திகள் மற்றும் தேசிய செய்திகள் என அனைத்து வகையான செய்திகளையும் பெறலாம். பயனாளிகள் செய்திகளை பார்ப்பதுடன் அந்த செய்தியை பகிரும் நபர்களை பின்தொடரவும் முடியும். இந்த புதுமையான அம்சம் status tab இல் தோன்றும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.