உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது பயனர்கள் தங்கள் மெசேஜ்களை திருத்தம் செய்யும் வகையில் புதிய அப்டேட்டை கொண்டு வருகிறது. Whatsapp இதுவரை ஒருமுறை அனுப்பிய மெசேஜ் ஐ திருத்தும் வசதி இல்லாததால் தவறாக அனுப்பப்பட்ட மெசேஜ்யை டெலிட் செய்து விட்டு புதிதாக அனுப்ப வேண்டி இருந்தது. இந்நிலையில் அனுப்பிய மெசேஜ்யை 15 நிமிடங்களில் எடிட் செய்யும் வசதியை விரைவில் கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.