சென்னையில் வருகின்ற ஏப்ரல் 3ம் தேதி முதல் ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இதில் மொத்தம் எழுவது லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சிஎஸ்கே அணி சென்னையில் ஏழு லீக் ஆட்டங்களில் விளையாட உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடங்க உள்ளதை முன்னிட்டு 198 ரூபாய் broad band திட்டத்தினை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுவரை இல்லாத அளவில் இந்த சிறிய தொகைக்கு அன்லிமிடெட் இன்டர்நெட் வசதி வழங்கப்பட இருக்கிறது. ஆனால் இந்த வசதி வெறும் 10 MBPS அளவிற்கு தான் கிடைக்கும் என ஜியோ அறிவித்துள்ளது. இதே நிறுவனம் 30 MBPS வேகம் கொண்ட இன்டர்நெட்டை 399 ரூபாய்க்கு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.